×

சிறுமி கூட்டு பலாத்காரத்தில் திடுக்கிடும் தகவல்: பப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விருந்து கொடுத்த பள்ளி நிர்வாகம்

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல தனியார் ‘பப்’ உள்ளது. இதில் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி வெளியே வந்த 17 வயது சிறுமியை, இளைஞர்கள் காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக  5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகம் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்த ₹2 லட்சம் பணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் 120 மாணர்கள் பங்கேற்றனர். அதில், பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒருவர். பப்பில் 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி அளித்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Bubble Plus 2 , Shocking news of girl gang rape: The school administration gave a party for Bubble Plus 2 students
× RELATED பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை...